07th January 2018 16:58:13 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகம் மற்றும்- கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினருக்கு எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொடர்பான செயலமர்வு ஜோன் கீல்ஸ் செரிடி பவுண்டேஷன் தலைமையில் கிளிநொச்சியில் உள்ள நெலும்பியச கேட்போர் கூடத்தில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களினால் விடுத்த வேண்டுகோளுக்கமைய ஜோன் கீல்ஸ் செரிடி பவுண்டேஷன் தலைமையில் இந்த செயலமர்வு இடம்பெற்றன.
இந்த செயலமர்வில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 66, 57 மற்றும் 65 ஆவது படைப் பிரிவுகளில் இருந்து 30 இராணுவ அதிகாரிகளும் 1000 படை வீரர்களும் இணைந்திருந்தனர்.
மேலும் 'எச்.ஐ.வி , எய்ட்ஸ் மற்றும் 'கல்வி மூலம் தடுப்பு மற்றும் சரியான தகவலுக்கான அணுகல்' என்ற தலைப்பில் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகபடையினர்களுக்குசெயலமர்வு இடம்பெற்றது.இந்த செயலமர்வில் 350 படை வீர்கள் இணைந்திருந்தனர்.
இந்த நிகழ்விற்கு கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சாந்துசித்த பனன்வல, திரு. ஐவன் பெரேரா, எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பற்றிய விரிவுரையாளர்களும் இணைந்திருந்தனர்.
Best Sneakers | Men's Footwear