Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th June 2018 12:37:20 Hours

இராணுவத்தினரால் மரநடுகை மற்றும் சிரமதான பணிகள்

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் (5) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை மரநடுகை, சிரமதான மற்றும் மரக்கன்றுகள் விநியோகிக்கும் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டன.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது எண்ணக் கருவிற்கமைய 57 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள பொது மக்களுக்கு மரக்கன்றுகள் இராணுவத்தினரால் விநியோகிக்கப்பட்டன.

மேலும் 572 ஆவது படைத் தலைமையகத்தினால் கிளிநொச்சி நகர பிரதேசத்தில் சிரமதான பணிகள் (5) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றன. அத்துடன் பாடசாலையின் பிள்ளைகள், ஆசிரியர்கள் மற்றும் அரச அலுவலக ஊழியர்களும் இந்த சிரமதான பணிகளில் ஈடுபட்டனர்.

Authentic Nike Sneakers | Women's Nike Air Max 270 trainers - Latest Releases