Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th December 2022 04:38:41 Hours

இராணுவ வழங்கல் பாடசாலையில் பணிநிலை பாடநெறியில் பட்டம் பெற்ற 31 அதிகாரிகள்

இராணுவம் (26) கடற்படை (02), விமானப்படை (01), பங்களாதேஷ் (01), நேபாளம் (01) அடங்கலாக 31 அதிகாரிகள் குழுவினர், திருகோணமலை இராணுவ வளங்கல் பாடசாலையில் ஒரு வருட இராணுவ வளங்கல் பாடநெறி - இல 8 னை நிறைவு செய்ததன் முகமாக வெள்ளிக்கிழமை (09) கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது பட்டம் பெற்றனர்.

இராணுவ வழங்கல் பாடசாலை தளபதி பிரிகேடியர் ஈஎம்எம் பெர்னாண்டோ எச்டிஎம்சி எல்எஸ்சி ஏஏடிஓ அவர்களின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இராணுவ வழங்கல் பாடநெறி இலங்கை இராணுவத்தின் வழங்கல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, இராணுவத்தில், அவர்களின் தொழில் மற்றும் வழக்கமான நடைமுறைகளை நடத்துவது தொடர்பான, வளங்கல் மற்றும் நிர்வாகத் துறைகளில் உயர் தொழில்முறைப் பாடமாக அமைந்துள்ளது. இராணுவ வழங்கல் பாடநெறியானது ஒரு வருட காலத்திற்கு முழு நேர பாடநெறியாக நடத்தப்படுகிறது.

இந்த பாடநெறியானது இலங்கை இராணுவத்தின் தெரிவு செய்யப்பட்ட மாணவ அதிகாரிகளின் திறன்கள் மற்றும் மனோபாவங்களை விருத்தி செய்வதற்கும், அந்த அதிகாரிகள் இராணுவத்திலோ அல்லது அந்தந்த நிறுவனங்களிலோ சிரேஷ்ட வழங்கள் நியமனம் பெற்றவர்களாக நியமிக்கப்படுவதற்கு முன்னர், சகோதர சேவைகள் மற்றும் நட்புறவான வெளிநாட்டு நாடுகளுக்கும் இப்பாடநெறியை விரிவுபடுத்துவதாகும்.

இந்த பாடநெறி ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதுடன், இது வழங்கள் முதுகலை (எல்எம் , எம்பீஏ) பட்டத்தினை வழங்குகிறது. இதனை தவிர, தகுதி பெற்றவர்கள் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு விரிவான ஆங்கில மொழி பாடநெறிக்கு உட்படுகிறார்கள்.

பிரதம அதிதியை இராணுவ வழங்கல் பாடசாலை தளபதி பிரிகேடியர் ஈஎம்எம் பெர்னாண்டோ எச்டிஎம்சி எல்எஸ்சி ஏஏடிஓ அவர்கள், இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுடன் இணைந்து வரவேற்றதை தொடர்ந்து வெள்ளிக்கிழமை நிகழ்வு ஆரம்பமானது.

இராணுவ வழங்கல் தளபதி அன்றைய பிரதம அதிதியான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை வரவேற்ற பின்னர், 31 பட்டதாரிகளுக்கும் சான்றிதழ்கள் அடங்கிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரவாரங்களுக்கு மத்தியில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வின் மற்றுமொரு சிறப்பு அம்சம் இரண்டு மதிப்புமிக்க இராணுவ வழங்கல் பாடநெறிக்கு விருதுகளை வழங்குவதாகும். ‘சிறந்த வழங்கல் திட்டமிடளாலர்’ விருது இலங்கை இராணுவ சேவைப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஆர்ஏஏ செனவிரத்ன எல்எஸ்சி அவர்களுக்கும், பாடநெறி - இல 8 இல் சிறந்த செயல்திறன் விருதும் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் மேஜர் என்சிசிபீ நவரத்ன அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பட்டதாரிகளுக்கு ஆற்றிய உரையில் வழங்கல் தொடர்பான தொழில்முறை பாடநெறிகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தையும் எந்தவொரு நிறுவனத்தையும் மேம்படுத்துவதற்கான அவற்றின் பயன்பாட்டை சுட்டிக் காட்டினார். உலகில் நிலவும் சுகாதார அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பாடநெறியினை தொடர்ந்த வெளிநாட்டு பட்டதாரிகளுக்கு அவர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

பின்னர், நிகழ்ச்சி நிரலில் மேலும் ஒரு சம்பிரதாயமாகவும் அதிகாரப்பூர்வமாகவும் பாடசாலையில் ‘கோல்டன் லாக் 2021- 2022’ வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி உட்பட அதிதிகளிடம் முதல் சில பிரதிகள் கையளிக்கப்பட்டன. அன்றைய நிகழ்வுகளின் நிறைவில், இராணுவ வழங்கல் தளபதி அன்றைய பிரதம அதிதிக்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கினார்.

பட்டமளிப்பு விழாவில் இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் சி.டி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் செனரத் யாப்பா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, இராணுவ பொதுச் செயலாளர் மேஜர் ஜெனரல் டிபீஎஸ்என் போதோட்ட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி, இராணுவ காலாட்படை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஏசி லாமாஹேவா டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, உபகரண பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜிஆர்ஆர்பீ ஜயவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, இராணுவ வழங்கல் பாடசாலையின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பீ சமரகோன் எச்டிஎம்சி எல்எஸ்சி, போர் கருவி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்ஆர்ஆர்டபிள்யூடபிள்யூஎச்ஜேபீ வணிகசேகர யுஎஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் அழைப்பாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.