Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th November 2023 09:10:01 Hours

இராணுவ புலனாய்வுப் படையணியின் புதிய படைத் தளபதி கடமை பொறுப்பேற்பு

மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் இராணுவ புலனாய்வு படையணியின் 24வது படைத் தளபதியாக 2023 நவம்பர் 23 அன்று இராணுவ புலனாய்வு படைத் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள படைத் தளபதியை பிரிகேடியர் டிஎன் மஜீத் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எல்எஸ்சீ மற்றும் நிலைய தளபதி பிரிகேடியர் டிடிபீ சிறிவர்தன ஆர்எஸ்பீ பீஎஸ்சீ எல்எஸ்சீ ஆகியோரால் வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து படையணி படையினரின் நினைவு தூபியில் மலர் அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட படைத் தளபதிக்கு தலைமையக வளாகத்தில் இராணுவ புலனாய்வுப் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

பின்னர், மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதை அடையாளப்படுத்தும் வகையில், மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் சிரேஷ்ட அதிகாரிகள் முன்னிலையில் உத்தியோகபூர்வ பதிவேட்டில் கையெழுத்திட்டார். பின்னர், இந்த சிறப்பு நிகழ்வின் நினைவாக முகாம் வளாகத்தில் மரக்கன்றும் நட்டுவைத்தார்.

மேலும், மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் தனது பணி மற்றும் கடமைகளை நிர்ணயித்த பின்னர், அதிகாரிகளுக்கு உரையாற்றினார். படையணியின் விம்பத்தை பாதுகாக்க ஒரு குழுவாக பணியாற்றுவதன் நோக்கத்தை இதன்போது வலியுறுத்தினார்.

அன்றைய நிகழ்வின் நிறைவில் புதிய படைத்தளபதி அனைத்து நிலையினருடான தேநீர் விருந்துபசாரத்தில் பங்கேற்றதுடன் அனைவருடனும் உரையாடினார்.