22nd April 2024 13:08:15 Hours
இராணுவ தொண்டர் படையணியின் பிரதித் தளபதி மேஜர் ஜெனரல் எம்.டி.கே.ஆர் சில்வா கேஎஸ்பீ அவர்கள் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகத்திற்கு 2024 ஏப்ரல் 18ஆம் திகதி விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த பிரதித் தளபதிக்கு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், நிலைய தளபதி பிரிகேடியர் எச்.ஏ. கீர்த்திநாத ஆர்எஸ்பீ கேஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார். படையினருக்கு உரையாற்றிய சிரேஷ்ட அதிகாரி, தற்போதைய கடமைகள் மற்றும் பொறுப்புகளை வெற்றிகரமாக ஒருங்கிணைத்தமைக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் நினைவாக நினைவுச் சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதுடன் விஜயம் நிறைவடைந்தது. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள கலந்துகொண்ட விசேட மதிய உணவு விருந்து படையணியினால் வழங்கப்பட்டது.