Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd February 2023 10:09:30 Hours

இராணுவ தளபதியினால் சுதந்திர தின ஒத்திகை ஆய்வு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானி, கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 29) எதிர்வரும் சனிக்கிழமை (4) திகதி 75 வது சுதந்திர தின நிகழ்வில் இராணுவம் பங்குபற்றுவதற்கான ஒத்திகைகளை பார்வையிட்டார்.

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் ஒத்திகையை பார்வையிட்ட பின்னர் அணிவகுப்புக்கு பொறுப்பானவர்களுக்கு இராணுவ அணிவகுப்பு பிரிவுகளில் சில தரமான மேம்பாடுகள் மற்றும் தேவையான மாற்றங்களைச் செய்வதற்கு மேலதிக அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இந்த விஜயத்தின் போது, லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, அவர்கள் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து அணிவகுப்பில் பங்குபற்றும் இராணுவ வீரர்களுக்கான தங்குமிட வசதிகள் மற்றும் அவர்களது ஏனைய தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.