23rd September 2022 16:23:14 Hours
கஜபா படையணி படைவீரரான பிரிகேடியர் டப்ளியூ எ எம் வீரசூரிய ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ (ஓய்வு) இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை வியாழக்கிழமை (22) இராணுவ தளபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுடனான சிநேகபூர்வ சந்திப்பின் போது, இராணுவத்தின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் தொடர்பாக கருத்துக்களை பரிமாறிக் கொண்டார். மேலும் இராணுவத் தளபதியாக கடமையாற்றும் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கு அவர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இச் சந்திப்பின் முடிவில் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பிரிகேடியர் டப்ளியூ எ எம் வீரசூரிய ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ (ஓய்வு) அவர்களுக்கு நினைவுச் சின்னத்தை வழங்கி நல்லெண்ணத்தை அடையாளப்படுத்தினார்.