23rd June 2022 14:25:44 Hours
இலங்கை கடலோர காவல் படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்க அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை வியாழக்கிழமை (23) இராணுவத் தலைமையக தளபதி அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இக்கலந்துரையாடலின் போது, இராணுவத் தளபதியின் நியமனம் குறித்து ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்க அவர்கள் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன், கரையோரக் காவல்படையினரின் பணிகள் மற்றும் திட்டமிடப்பட்ட எதிர்கால திட்டங்கள் போன்றவற்றையும் அவருக்கு விளக்கமளித்தார்.
இதன் போது லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, கரையோரப் பாதுகாப்புத் படையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளைப் பாராட்டியதுடன், அவர்களின் சட்டபூர்வமான கடமைகளைச் செய்வதற்கு அவர்களுக்கு அனைத்து ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்தார்.
சுமூகமான உரையாடலின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்க ஆகியோர் நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.