Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th November 2023 08:16:18 Hours

இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் இராணுவத் தளபதியை சந்திப்பு

இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மான்பு மிகு திருமதி கே. க்ஷேணுகா செனவிரத்ன அவர்கள் புதிய நியமனத்தை ஏற்றுக் கொள்வதற்காக இந்தியாவிற்கு புறப்படுவதற்கு முன்னர், புதன்கிழமை (15) காலை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் குறித்த புதிய நியமனத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இரு நிறுவனங்களுக்கிடையில் நடைமுறையில் உள்ள இருதரப்பு பயிற்சித் தொகுதிகள் மற்றும் பரிமாற்ற நிகழ்ச்சிகள் தொடர்பாக கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். நல்லெண்ணம் மற்றும் நட்புறவுப் பிணைப்புகளை மேலும் மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் இராணுவத் தளபதி எடுத்துரைத்தார்.

சந்திப்பின் நிறைவில், புதிய உயர்ஸ்தானிகர் மான்பு மிகு திருமதி கே. க்ஷேணுகா செனவிரத்ன அவர்களுக்கு நிகழ்வின் நினைவாக நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.