Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th July 2023 21:06:36 Hours

ஆசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் 400×4 அஞ்சலோட்டப் போட்டியில் இராணுவ வீரர்களுக்கு தங்கப் பதக்கம்

பேங்கொக்கில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் போட்டியில் இராணுவ வீரர்களைக் கொண்ட இலங்கை அணி ஞாயிற்றுக்கிழமை (16) 400 × 4 (ஆண்கள்) அஞ்சலோட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று புதிய சாதனையை படைத்துள்ளது.

அணியில் 4 ஓட்ட வீரர்களில் 2 (தொ) வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சார்ஜன் எச்கேகே குமாரகே, 6 வது இலங்கை பீரங்கி படையணியின் பொம்பார்டியர் எஸ்ஏ தர்ஷன, 2 (தொ) வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் லான்ஸ் கோப்ரல் ஆர்எம்ஆர்என் ரராஜகருனா, 6 வது இலங்கை பீரங்கி படையணியின் கன்னர் ஜீடிகேகே நிகு ஆகியோரே அஞ்சலோட்டப் போட்டியில் பங்குபற்றினர்.

அந்த அணி 3.01.56 வினாடிகளில் சக போட்டியாளர்களுடன் போட்டியிட்டு போட்டியியை நிறைவு செய்து இலங்கை சாதனையை படைத்தது.

இதேவேளை, 400 x 4 பெண்கள் பிரிவில் இலங்கை அணி இன்று (16) வெள்ளிப் பதக்கத்தை வென்றது. இந்த நிகழ்வில் இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 5 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் கோப்ரல் என். ரத்நாயக்க கலந்துகொண்டார். அவர்கள் 3:33.27 நிமிடங்களில் போட்டியை நிரைவு செய்து சாதனையையும் படைத்தனர்.