12th June 2023 19:11:23 Hours
அண்மையில் நிலை உயர்வு பெற்ற வடக்கு முன்னரங்கு பராமரிப்புப் பிரதேசத்தின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஏ பத்திரன ஆர்எஸ்பீ, அவர்கள் திங்கட்கிழமை (ஜூன் 12) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை அலுவலகத்தில் சந்தித்து இராணுவத் தளபதியின் வாழ்த்துக்களுக்கு மத்தியில் அதிகார சின்னங்களைப் பெற்றுக்கொண்டார்.இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுடனான சந்திப்பின் போது புதிய இரண்டு நட்சத்திர ஜெனரலுக்கு ஜெனரலின் அடையாள வாள் வழங்கப்பட்டது.
இந்த சந்திப்பின் போது இராணுவத் தளபதி நிலை உயர்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரியை நாட்டின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தில் செழிப்புக்கான சிறந்த நலன்களுக்காக அர்ப்பணிப்புடன் தனது பங்கிற்கான அர்ப்பணிப்பை மேலும் மேம்படுத்துமாறு வலியுறுத்தினார். பின்னர் மேஜர் ஜெனரல் எஸ்ஏ பத்திரன ஆர்எஸ்பீ அவர்கள் இராணுவ தளபதி மற்றும் பார்வையாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார். இராணுவத் தளபதி புறப்படுவதற்கு முன்னர் நினைவுகளின் சின்னமாக அவருடன் மேஜர் ஜெனரல் எஸ்ஏ பத்திரன ஆர்எஸ்பீ அவர்கள் பல புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.