16th January 2024 20:12:06 Hours
241 வது காலாட் பிரிகேடின் 11 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் அக்கரைப்பற்று ஸ்ரீ விஜயராம விகாரையில் வீழ்ந்த மரமொன்றை அகற்றுவதற்கு தமது உதவிகளை வழங்கினர். ஜனவரி 10ஆம் திகதி கடும் மழை மற்றும் காற்றினால் தம்மரத்தன சிங்கள பாடசாலைக்கு செல்லும் வீதியில் முறிந்து வீழ்ந்த மரம், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன், மின்சாரத் தடையையும் ஏற்படுத்தியிருந்தது.
அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் மின்சார சபையின் ஒத்துழைப்புடன், படையினர் வீழ்ந்த மரத்தை துரிதமாக அகற்றி, பாதிக்கப்பட்ட வீதியூடாக போக்குவரத்து மற்றும் மின்சார விநியோகம் ஆகிய இரண்டையும் சீர்செய்தனர்.