18th January 2024 15:09:56 Hours
96 வது தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2023 கொழும்பு ரோயல் கல்லூரி உள்ளக அரங்கில் 2024 ஜனவரி 13-17 வரை இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் போலீஸ் பிரதிநிதிகள் உட்பட நாடு முழுவதிலும் உள்ள 17 கழகங்களைச் சேர்ந்த 151 குத்துச்சண்டை போட்டியாளர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
அட்டகாசமான திறமையை வெளிப்படுத்திய இலங்கை இராணுவ ஆண்கள் குத்துச்சண்டை அணி, ஆண்கள் பிரிவில் சம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அவர்களின் குறிப்பிடத்தக்க செயல்திறன் நிகழ்வின் போது 10 தங்கம், 06 வெள்ளி மற்றும் 10 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று, 'இந்த ஆண்டின் மிகவும் வெற்றிகரமான குத்துச்சண்டை கழகம் என்ற கோப்பையைப் பெற்றது.
இந்த நிகழ்விற்கு ஒரு முக்கியத்துவத்தை சேர்க்கும் வகையில், இலங்கை இராணுவ மகளிர் குத்துச்சண்டை அணி பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றது. இலங்கை இராணுவத்தின் குத்துச்சண்டை வீராங்கனைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் அவர்களின் பாராட்டத்தக்க செயற்திறன் 02 தங்கம், 05 வெள்ளி மற்றும் 01 வெண்கலம் என பதக்கங்களைப் பெற்றுக் கொண்டது.
ஆண்களுக்கான சிறந்த குத்துச்சண்டை வீரருக்கான விருதை இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் கோப்ரல் கே.ஜி.சி பத்மசிறி அவர்கள் பெற்றுக் கொண்டதுடன், பெண்கள் பிரிவில் சிறந்த தோல்வியாளராக இலங்கை இராணுவ மகளிர் படையணியின் பெண் சிப்பாய் எம்.ஜி.எம்.டி தசுனிகா அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்.
நிகழ்விற்கு கௌரவம் சேர்க்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ எம்பீல் அவர்கள் விருது வழங்கும் விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இராணுவ குத்துச்சண்டைக் குழுவின் தலைவர், மேஜர் ஜெனரல் எம்கேயூபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி ஐஜி மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் சாம்பியன்ஷிப் போட்டியை கண்டு களித்தனர். .