11th June 2023 20:12:55 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 573 வது காலாட் பிரிகேட்டின் 9 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினரால் மலையாளபுர முகாம் வளாகத்திற்கு முன்பாக, பொசன் தினத்தன்று (ஜூன் 03) அன்னதானம் வழங்கப்பட்டது.
9 வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் பிஜிடி சூரியசேன மற்றும் 573 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எஸ்டபிள்யூஆர் பிரசன்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்சி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 571 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஜிஎடிகேஜி கணேகொட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டனர்.