30th October 2023 22:06:56 Hours
வெலிகந்த மொனரதென்னவில் தனது வயோதிப கணவருடன் வசித்து வரும் திருமதி மாகலின் பெரேராவின் பாழடைந்த வீட்டின் கூரையை 233 வது காலாட் பிரிகேடின் 9 வது இலங்கை பீரங்கி படையினர் தாமாக முன்வந்து திருத்தியமைத்தனர்.
கூரை பழுதடைந்து வாழ்வதற்கு ஏற்றதாக இல்லாததால் இது தொடர்பாக உதவிக்காக குடும்பத்தினர் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜி அவர்களின் உதவியை நாடினர்.
9 வது இலங்கை பீரங்கி படையினர் பொறியியல் சேவை படையினரின் ஆதரவுடன் ஒரு சில நாட்களுக்குள் திட்டத்தை முடித்து, வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 27) முறைப்படி கையளித்தனர்.
23 வது காலாட் படை பிரிவின் தளபதி கேவிஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி மற்றும் 233 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஏகேசிஎஸ் டி சில்வா ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.