Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th July 2023 20:31:08 Hours

9 வது இலங்கை சமிக்ஞைப் படையணியின் 15வது ஆண்டு நிறைவு

9வது இலங்கை சமிக்ஞைப் படையணி தனது 15வது ஆண்டு நிறைவை சனிக்கிழமை (ஜூலை 15) கொண்டாடியது. ஆண்டு நிறைவு நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக, தமது படைக்குழுக்கிடையேயான கிரிக்கெட் போட்டிகள் மற்றும் கரப்பந்து போட்டிகள் சனிக்கிழமை (ஜூலை 08) நடைபெற்றன.

2023 ஆம் ஆண்டு ஜூலை 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் தமது படையலகின் விகாரை மற்றும் கனகாம்பிகை குளக்கோவிலில் படையலகின் கொடிக்கு ஆசி வழங்கப்பட்டது. 15 ஜூலை 2023 அன்று, கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் பிஎம்எம்பி ஹேரத் ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்களுக்கு பிரதான நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

சம்பிரதாய அணிவகுப்பு மரியாதைக்கு பிறகு, கட்டளை அதிகாரி வளாகத்தில் மரக்கன்றினையும் நட்டு வைத்தார். அதைத் தொடர்ந்து குழுப்படம் எடுக்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.பின்னர் கட்டளை அதிகாரி அனைத்து நிலையினருடனான மதிய உணவில் பங்கேற்றியதுடன், படையினறுக்கு உரையாற்றினார்.

9 வது இலங்கை சமிக்ஞை படையணி அனைத்து நிலையினருக்குமான போட்டியை தமது படையணியின் மைதானத்தில் நடாத்தியது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை சமிக்ஞைப் படையணியின் பிரதம அதிகாரியும், இலங்கை சமிக்ஞைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கேஏடபிள்யூஎஸ் ரத்நாயக்க அவர்கள் கலந்துகொண்டதுடன், முதலாம் படை பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் ஆர்பீ முனிபுர ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள்,கட்டளை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். மேலும், பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி மற்றும் வானவேடிக்கைகள் வரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டதன் மூலம் இந்த நிகழ்வு மிகவும் வண்ணமயமானது.