04th February 2023 07:08:12 Hours
75வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு (பெப்ரவரி 4) பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் பரிந்துரையின் பேரில், முப்படைகளின் சேனாதிபதி அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவர்களால் இலங்கை இராணுவத்தின் மொத்தம் 208 அதிகாரிகள் (நிரந்தரம் மற்றும் தொண்டர்) சிப்பாய்கள் 7790 (நிரந்தரம் மற்றும் தொண்டர் வெற்றிடத்தின் அடிப்படையில் அடுத்த நிலைக்கு நிலை உயர்த்தப்பட்டனர்.
அதன்படி, மேஜர் ஜெனரல் நிலைக்கு 8 பிரிகேடியர்களும், பிரிகேடியர் நிலைக்கு 17 கேணல்களும், கேணல் பதவிக்கு 10 லெப்டினன் கேணல்களும், லெப்டினன் கேணல் நிலைக்கு 10 மேஜர்களும், மேஜர் நிலைக்கு 78 கெப்டன்களும், 12 லெப்டினன்கள் கெப்டன் நிலைக்கும், 9 லெப்டினன்கள் (நிவ) கெப்டன் (நிவ) நிலைக்கும் மற்றும் 64 இரண்டாம் லெப்டினன்கள் லெப்டினன் நிலைக்கும் நிலை உயர்வு பெற்றுள்ளனர்.
சிப்பாய்கள் பிரிவில், அதிகாரம் ஆணை அற்ற அதிகாரி-I நிலைக்கு மொத்தம் 181 பேர் அதிகாரம் ஆணை அற்ற அதிகாரி -II க்கு, நிலைக்கு 473 பணிநிலை சார்ஜென்களும், பணிநிலை சார்ஜென் நிலைக்கு 679 சார்ஜென்களும், 1697 கோப்ரல்கள் சார்ஜென் நிலைக்கும், 1740 லான்ஸ் கோப்ரல்கள் கோப்ரல் நிலைக்கும் மற்றும் 3020 சிப்பாய்கள் லான்ஸ் கோப்ரல் நிலைக்கும் வெற்றிடத்தின் அடிப்படையில் அடுத்த தரத்திற்கு நிலை உயர்த்தப்பட்டுள்ளனர்.
இராணுவத்தின் இரண்டு நட்சத்திர மேஜர் ஜெனரல் நிலைக்கு சிரேஷ்ட பிரிகேடியர்களின் நெலும் பொகுண அரங்கின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிரிகேடியர் எல்எஸ் பாலச்சந்ர ஆர்எஸ்பீ, 24 வது காலாட் படைபிரிவின் தளபதி பிரிகேடியர் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி, தர நிரணயம் மற்றும் ஆய்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டிஎம்பீபீ திஸாநாயக்க, வடக்கு முன்னரங்கு பராமரிப்பு பகுதியின் தளபதி பிரிகேடியர் ஏசிஏ டி சொய்சா யுஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சி, 66 வது காலாட் படைபிரிவின் தளபதி பிரிகேடியர் ஆர்கேஎன்சி ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசி, ஆராய்ச்சி கருத்தியல் மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஜிடபிள்யூஏ செனவிரத்ன யுஎஸ்பீ பீஎஸ்சி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி பிரிகேடியர் ஐஏஎன்பீ பெரேரா ஆர்டபிள்யூபீ யுஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி, வெளிநாட்டு நடவடிக்கை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பீபீஏ பெரேரா எச்டிஎம்சி பீஎஸ்சி ஆகிய சிரேஷ்ட பிரிகேடியர்க்ளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.