10th November 2023 21:38:10 Hours
7 வது இலங்கை சிங்க படையினர் வியாழக்கிழமை (நவ. 9) பம்பைமடு பனிச்சங்குளம் குளத்தில் ஏற்பட்ட வெடிப்புகளை அடைத்து உடனடியாக புணரமைப்பு செய்தனர். ஒரு அதிகாரியும், 25 சிப்பாய்களும் அடைமழையில் பேரழிவைத் தவிர்க்கும் வகையில் இந்த திட்டத்தை மேற்கொண்டனர்.
கமநல திணைக்களத்தினால் பராமரிக்கப்படும் குளத்தின் மூலம் ஏறக்குறைய 15 ஏக்கர் பயிர்ச்செய்கைகளுக்கு நீர் வழங்கப்படுகின்றன. வெள்ளம் ஏற்பட்டு பயிர்ச்செய்கை பாதிப்பதற்கு முன்னர் படையினர் குளத்தில் ஏற்பட்ட வெடிப்பை மணல் மூடைகளை கொண்டு சீர் செய்து கசிவைத் தடுத்தனர்.
56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 563 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் 7 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் டி.எம்.ஜே.ஏ தசநாயக்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் இப்பணி மேற்கொள்ளப்பட்டதுடன், இராணுவத்தினரின் இப்பணியை கிராம மக்கள் பாராட்டினர்.