26th December 2023 22:24:11 Hours
7 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் 8 வது ஆண்டு நிறைவை டிசம்பர் 19 அன்று பல நிகழ்வுகளுடன் கொண்டாடியது.
இந்நிகழ்வு 7 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எல்.ஜி.எல்.பி குணரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் டிசம்பர் 12 முதல் 19 வரை மத அனுஷ்டானங்கள், இராணுவ சம்பிரதாயங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் நடைபெற்றது.
அனைத்து இராணுவ வீரர்களுக்கும் ஆசீர்வாதம் வழங்கும் முகமாக நடைபெற்ற போதி பூஜை மற்றும் தர்ம பிரசங்கத்துடன் ஆண்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. ஆண்டு நிறைவு நாளான 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் திகதி, கட்டளை அதிகாரிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையுடன் இராணுவ சம்பிரதாயங்களும் நடைபெற்றன.
குழு படம் மற்றும் அனைத்து நிலையினருடனான மதிய உணவுடன் ஆண்டு நிகழ்வுகள் முடிவடைந்தன.