18th September 2023 20:04:08 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 68 வது காலாட் படைப்பிரிவின் 681 வது காலாட் பிரிகேட் படையினர் முல்லைத்தீவு ஸ்ரீ பாரதி மகா வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு விரிவுரையை செப்டம்பர் 15 ஆம் திகதி பாடசாலை வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.
தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபையின் வடக்கு/கிழக்கு ஒருங்கிணைப்பு அதிகாரி எம்.எம்.எம்.பீ.எம்.ரஷாத் அவர்களினால் விரிவுரை நடத்தப்பட்டது. 200க்கும் மேற்பட்ட மாணவர்களும் 8 ஆசிரியர்களும் விரிவுரையை செவிமடுத்தனர்.
இந்நிகழ்வில் 681 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் என்.டி.சி குணதுங்க, 6 வது கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.