19th November 2023 21:36:04 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 68 வது காலாட் படைப்பிரிவின் 593 வது காலாட் பிரிகேடின் 3 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி படையினர் மற்றும் 6 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினர் நவம்பர் 17 அன்று புதுகுடியிருப்பு மற்றும் ஆனந்தபுரம் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு குடும்பங்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கினார்.
பிரதேச செயலகங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் ஒருங்கிணைந்து வெள்ள மட்டத்தை தணிப்பதற்காக ஆனந்தபுரம் கால்வாயினை அகலப்படுத்தல், நிவாரணம் வழங்கல், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றல் மற்றும் துப்புரவுப் பணிகளில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம் கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியு, 68 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சீ மற்றும் 593 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எச்வீஏ சோமவீர ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் இந்த நிவாரண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.