28th January 2024 15:42:50 Hours
68 வது காலாட் படைப்பிரிவின் படையினரின் விளையாட்டுத் திறனை வளர்ப்பது, நட்புறவை வளர்ப்பது மற்றும் பொழுதுபோக்கு வழங்கும் நோக்கத்துடன் படகுப் போட்டி 23 ஜனவரி 2024 அன்று புதுமாத்தளனில் நடைபெற்றது. 593 மற்றும் 681 வது காலாட் பிரிகேட்களின் படையினரால் 68 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக படைப்பிரிவு தளபதி அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
ஒற்றையர், இரட்டையர், மூன்று மற்றும் கண்காட்சி நிகழ்வுகள் போன்ற நான்கு பிரிவுகளில் பங்கேற்பாளர்கள் போட்டியில் கலந்துகொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும் பண பரிசுகளும் பிரதம அதிதியால் வழங்கி வைக்கப்பட்டன.
68 வது காலாட் படைப்பிரிவு ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றதுடன் 9 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி இரட்டையர் பிரிவிலும் 6 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி மூவர் போட்டியிலும் வெற்றி பெற்றனர்.
மரதமடுக்குளம் மீனவச் சங்கத்தினர் இந்த நிகழ்வின் வெற்றிக்கு மேலும் வலுசேர்த்தனர். படகுகள் மற்றும் துடுப்புகளை வழங்குவதில் அவர்களின் ஆதரவு, படகோட்டுதல் போட்டியை தடையின்றி செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.