30th October 2023 22:04:32 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 68 வது காலாட் படைப்பிரிவின் படையினர் வெள்ளமுள்ளிவாய்க்காலில் வசிக்கும் 5 குடும்பங்களுக்கு புதன்கிழமை (ஒக்டோபர் 25) அவர்களின் வீட்டு வாசலுக்கு சென்று தலா ரூபா 5000/= பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை வழங்கினர்.
68 வது காலாட் படைபிரிவின் படையினர் தங்கள் சிவில்-இராணுவ உறவுகளின் ஒரு பகுதியாக அந்த நிவாரணப் பொதிகளின் செலவினை ஏற்றனர். 68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி நிகழ்வை வெற்றிகரமாக நடத்த தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்.