27th April 2023 18:40:29 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 64வது காலாட் படைப்பிரிவின் 642 வது காலாட் பிரிகேட் இளைஞர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்தும் வகையிலும், பாதுகாப்புப் படையினருக்கும் பொதுமக்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலும், ஒட்டுசூட்டானில் உள்ள சிவில் விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் காற்பந்து விளையாட்டு போட்டியை ஏப்ரல் 06 முதல் ஏப்ரல் 11 வரை ஏற்பாடு செய்திருந்தது.
நாள் முழுவதும் நடைபெற்ற இப்போட்டிகளில் 8 சிவில் விளையாட்டுக் கழகங்களின் அணிகள் பங்கேற்றதுடன், இறுதிப் போட்டியில் வளர்மதி விளையாட்டுக் கழகம் மற்றும் பரந்தாமன் விளையாட்டுக் கழக அணிகள் மோதின. இறுதியில் போட்டி ஆரவாரத்துக்கு மத்தியில் வளர்மதி விளையாட்டுக் கழக வீரர்கள் வெற்றி பெற்றனர்.
இறுதிப் போட்டி மற்றும் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கும் நிகழ்வு ஏப்ரல் 11ஆம் திகதி ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக 64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்டிடபிள்யூகேஎன் எரியகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
642 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் டபிள்யூஎம்பீடபிள்யூஎன்டிபி வீரகோன் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 23 வது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 17 வது (தொ) கஜபா படையணியின் படையினர் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்ததுடன், இந்த படையணிகளின் அந்தந்த கட்டளை அதிகாரிகளால் போட்டிகள் நெருக்கமாக கண்காணிக்கப்பட்டன.
641 மற்றும் 642 வது பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் மற்றும் பொதுமக்கள் இறுதிப் போட்டியைக் கண்டுகளித்தனர்.