24th February 2023 19:00:13 Hours
மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் பூஸ்ஸ 61 வது காலாட் படைப்பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு புதன்கிழமை (பெப்ரவரி 22) ‘போராட்டம் மற்றும் துணிச்சலான சிப்பாய்’ என்ற தொணிப்பொருளில் விரிவுரையினை உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரி 1 லெப்டினன் கேணல் ஆர்.எம்.எச்.பி.கே ரத்ணாயக்க, ரணவிருவ இதழின் பிரதம ஆசிரியர் லெப்டினன் கேணல் ஈ.ஏ.ஏ.எஸ் சமிந்த மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரி 2 (புலனாய்வு) மேஜர் எச்.எம்.எஸ்.எச் பண்டார ஆகியோர் பூஸ்ஸ இலங்கை இலேசாயுத காலாட் படையணி பயிற்சி பாடசாலை நடைப்பெற்ற நிகழ்வின் போது விரிவுரை நிகழ்த்தினர்.
ந்த விரிவுரை அமர்வை 61 வது காலாட் படைப்பிரிவு மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகம் மற்றும் மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் ஒருங்கிணைப்புடன் 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்.எம்.யு ஹேரத்தின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி உட்பட மொத்தம் 19 அதிகாரிகள் மற்றும் 285 சிப்பாய் விரிவுரை அமர்வுகளில் பங்குபற்றினர்.