Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th June 2023 19:27:32 Hours

61 வது காலாட் படைபிரிவின் 15வது ஆண்டு நிறைவு

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 61 காலாட் படைப்பிரிவின் 15வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2023 மே 29-30 திகதிகளில் பூஸ்ஸ தலைமையக வளாகத்தில் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. இரண்டு நாள் நிகழ்வில் ஐந்து அணிகளின் பங்குபற்றுதலுடன் தலைமையக விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் போட்டி உட்பட பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெற்றன.

அதன்படி ஹிக்கடுவை சர்வோதய ‘சுவசெத முதியோர் இல்லத்தில் வசிக்கும் 12 முதியவர்களுக்கு சிறப்பு மதிய உணவு விருந்தும் வழங்கப்பட்டது. ஆண்டு நிறைவு நாளில் (மே 30), படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்எம்யூ ஹேரத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எச்டிஎம்சீ அவர்களுக்கு பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து படைபிரிவு வளாகத்தில் மரக்கன்றும் நடப்பட்டன. பின்னர், படை பிரிவு தளபதி அனைத்து படையினர்களுக்கும் உரையாற்றியதுடன், அவர்களின் இடைவிடாத அர்ப்பணிப்பு மற்றும் கடமைக்கான அர்ப்பணிப்புக்கும் நன்றி தெரிவித்தார். அனைத்து நிலையினருக்கும் மதிய உணவிருந்துபசாரம் வழங்கப்பட்டதை தொடர்ந்து நிகழ்வு முடிவுற்றது.