Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th July 2023 20:00:56 Hours

6 வது களப் பீரங்கிப் படையினரால் மூலிகை தோட்டம் சுத்தம்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 வது காலாட் படைப்பிரிவின் 141 வது காலாட் பிரிகேடின் 6 வது களப் இலங்கை பீரங்கிப் படையணியின் ஓர் அதிகாரி மற்றும் 30 சிப்பாய்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 23) வெயாங்கொடை வடந்தர கணேகந்த ஸ்ரீ சுமணராம புராண விகாரையின் 06 ஏக்கர் நிலப்பரப்பில் அரிய வகை மூலிகைகள் கொண்ட தோட்டத்தை தயார் செய்தனர். இத்திட்டம் விகாரையின் தலைமைக் குருவின் வேண்டுகோளின் பேரில் முன்னெடுக்கப்பட்டது.

இராணுவ வீரர்கள் அயராத முயற்சியில், காட்டு புதர்கள் மற்றும் புல்லுருவிகளை அகற்றி, மண் பாத்திகளை தயாரித்து, புதிய அரிய வகை மருத்துவ மூலிகைகளை நட்டு, தோட்டம் செழிக்க தேவையான உட்கட்டமைப்புகளை அமைத்தனர்.

141 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 6 வது களப் இலங்கை பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரி, மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியின் ஆசீர்வாதத்துடன் இத்திட்டத்தை நெருக்கமாக மேற்பார்வையிட்டனர். இந்தத் திட்டம் படையினரால் மேற்கொள்ளப்படும் வரை மூலிகைத் தோட்டம் நீண்ட காலமாக காட்டுப் புதர்களால் மூடப்பட்டிருந்தது.