09th April 2023 20:03:32 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 59 வது காலாட் படைப்பிரிவின் 593 வது காலாட் பிரிகேட் படையினரால் நாயாறு 593 வது காலாட் பிரிகேட் நுழைவாயிலில் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.
59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ரணசிங்க அவர்களால் வியாழக்கிழமை (ஏப்ரல் 6) பிரதேசத்தில் உள்ள இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஒரே மாதிரியான குடிநீர் வழங்கக்கூடிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைக்கப்பட்டது.
இந்த திட்டம் 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதியினால் ஆரம்பிக்கப்பட்டதுடன் அவர் தனது வெளிநாட்டு நண்பர்கள் மூலம் இத் திட்டத்திற்கான அனுசரணையை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அப்பகுதியின் நீர் அசுத்தமாகவும் கனிமங்களால் நிரம்பி காணப்பட்டதை தொடர்ந்து இராணுவ வீரர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தினர். திரு.சுனில் விஜேவர்தன, திரு.சஞ்சீவ அபேசிங்க, திரு.மஹிந்த சுபசிங்க, திரு.சம்மி சுமேத உள்ளிட்ட வெளிநாட்டு நன்கொடையாளர்களின் ஆதரவுடன் இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட்டது.
இந் நிகழ்வில் 593 வது காலாட் பிரிகேட்டின் தளபதி கேணல் சிந்தக விஜேநாயக்க, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பிரதேசத்தில் உள்ள சில பொதுமக்களும் கலந்துகொண்டனர்.