Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th July 2023 21:33:17 Hours

59 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை ஏற்பு

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 59 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் புதிய தளபதியாக இலங்கைப் பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ அவர்கள் வெள்ளிக்கிழமை (ஜூலை 14) சமய ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் பதவியேற்றார்.

புதிதாக நியமிக்கப்பட்ட 59 வது காலாட் படைப்பிரிவு தளபதியை பதவி நிலை அதிகாரிகள் வரவேற்றனர். மற்றும் அவர் வளாகத்திற்குள் வருகை தந்ததும் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து, படையினரால் அவருக்கு மரியாதை அணிவகுப்பும் வழங்கப்பட்டது.

அதன்பின், புதிய படைப்பிரிவின் தளபதி தனது கடமைகளை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையொழுத்திட்டார். நிதழ்வின் நினைவாக வளாகத்தில் மாங்கன்று ஒன்று நட்டாப்பட்டது.

பின்னர் இராணுவ சம்பிரதாயங்களுக்கு இணங்க புதிய படைப்பிரிவின் தளபதி அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு தனது கடமைகள் தொடர்பாக படையினருக்கு உரையாற்றினார்.

இந்நிகழ்வில் பதவி நிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்துகொண்டனர்.