05th September 2019 20:42:21 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 571 ஆவது படைத் தலைமையகத்தின் புதிய கட்டளைத் தளபதியாக கேர்ணல் D.K.S.K தொலஹே அவர்கள் தனது புதிய பதவியை இம் மாதம் (4) ஆம் திகதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய கட்டளைத் தளபதிக்கு 7 ஆவது இலேசாயுத காலாட் படையணியினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.
பின்னர் கட்டளைத் தளபதி அவர்களினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை மேற்கொள்ளப்பட்டு படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தினார். இறுதியில் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திலும் இணைந்து கொண்டார்.
இச்சந்தர்ப்பத்தில் 7 ஆவது இலேசாயுத காலாட் படையணி, 9 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை தளபதிகள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து கொண்டனர். best Running shoes | adidas