02nd March 2018 15:15:25 Hours
கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57ஆவது படைப் பிரிவின் 11ஆவது நினைவாண்டு விழாவானது இப் படைத் தலைமையக கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் விஜித்த ரவிப்பிரிய அவர்களின் தலைமையில் கடந்த திங்கட் கிழமை (26) இடம் பெற்றது.
இதன் முதற்கட்ட மத வழிபாட்டு நிகழ்வானது கிளிநொச்சிப் பிரதேசத்தில் இஸ்லாமிய வழிபாட்டுகள் ஜூம்மா பள்ளியில் பெப்ரவரி 20ஆம் திகதி இடம் பெற்றது.
இதன் அடுத்த கட்ட நிகழ்வூ கிளிநொச்சி கந்தசாமி கோவிலில் மற்றும் சென் திரேசா ஆலயத்தில் வழிபாட்டு நிகழ்வூகள் பெப்ரவரி 21ஆம் திகதி இடம் பெற்றது.
அத்துடன் கிளிநொச்சி லும்பினி விகாரையில் பௌத்த மத வழிபாடுகள் 21ஆம் திகதி வெள்ளிக் கிழமை படையினரின் பங்களிப்போடு இடம் பெற்றது.
மேலும் கிளிநொச்சி மகா தேவா ஆச்சிரமத்தின் 250சிறார்களுக்கான உணவூகளும் பெப்ரவரி 25ஆம் திகதி வழங்கப்பட்டது.
இவ்வாறு இப் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த மேஜர் ஜெனரல் விஜித்த ரவிப்பிரிய அவர்களுக்கு 7ஆவது இலங்கை காலாட் படையணியினரால் இராணுவ அணிவகுப்பு மரியாதையூம் வழங்கப்பட்டது.
அத்துடன் படையினருக்கான மதிய உணவூ விருந்தும் 57ஆவது படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.
best shoes | Jordan Shoes Sale UK