Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd May 2023 10:12:35 Hours

562 வது பிரிகேடினால் மறவன்குளம் கிராம மக்களுக்கு சுயதொழில் அறிவூட்டல்

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 56 வது காலாட் படைப்பிரிவின் 562 வது காலாட் பிரிகேடின் 15 வது (தொ) இலங்கை சிங்கப் படையினர் சிவில்-இராணுவத் நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக மறவன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை (14) வவுனியா மறவன்குள கிராமவாசிகளுக்கு சுயதொழில் அறிவூட்டலை வழங்கினர்.

562 வது காலாட் பிரிகேடின் தளபதி பிரிகேடியர் ஜேஎம்ஏ ஜயசேகர ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ், மறவன்குள முதியோர் சங்கத்தின் தலைவர் விடுத்த வேண்டுகோளுக்கு இனங்க இச்செயலமர்வு நடாத்தப்பட்டது.

இச் செயலமர்வை ஹிமான்சா அறக்கட்டளையின் தலைவி திருமதி துசாரி முத்துமாலி அவர்களால் மெழுகுவர்த்திகள், தரை விரிப்புகள், திரிகள், பத்தி மற்றும் மெழுகு விளக்குகள் தயாரிப்பதற்கான செய்முறை விளக்கம் வழங்கப்பட்டது. 15 வது (தொ) இலங்கை சிங்கப் படையணியின் படையினர் உர உற்பத்தி தொடர்பான விளக்கத்தை வழங்கினர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 562 வது காலாட் பிரிகேட் தளபதி கலந்துகொண்டதுடன், 562 வது காலாட் பிரிகேட் சிவில் விவகார அதிகாரி, 15 வது (தொ) இலங்கை சிங்கப் படையணியின் படையின் கட்டலை அதிகாரி சிரேஷ்ட அதிகாரி, மரவன் குளம் அபிவிருத்தி உத்தயோகத்தர் மற்றும் அதிக எண்ணிக்கையிலான கிராம மக்களும் கலந்து கொண்டனர்.