23rd December 2023 14:35:30 Hours
புளியங்குளம் தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் பாளைவாடி குளம் நிரம்பி வழிந்ததன் காரணமாக டிசம்பர் 19-21 காலப்பகுதியில் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால், 561 வது காலாட் பிரிகேடின் 16 இலங்கை சிங்க படையணியின் படையினர், இராணுவ உழவு இயந்திரங்களைப் பயன்படுத்தி, பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்துக்கு வசதிகளை ஏற்பாடு செய்தனர்.
பலத்த மழை மற்றும் நிரம்பி வழிந்த வெள்ளத்தால், பாளைவாடியில் இருந்து புளியங்குளம் வரையிலான சாலை 3-4 அடி வரை வெள்ளத்தில் மூழ்கியது.
56வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்ஜிபிஎம் காரியவசம் ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் படையினர் அந்த மனிதாபிமான சேவைகளை முன்னெடுத்தனர். 561வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் எம்ஜீஎ மலந்தய ஆர்எஸ்பீ மற்றும் 16 வது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோரின் மேற்பார்வையில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் முயற்சியில் இராணுவ வீரர்கள் ஈடுப்பட்டனர்.