04th April 2024 13:03:46 Hours
11 கெமுனு ஹேவா படையணி போகஸ்வெவ பிரதேச பார்வை குறைப்பாடுள்ள மக்களுக்கு உதவும் நோக்கில் 23 மார்ச் 2024 அன்று போகஸ்வெவ முதன்மை மருத்துவ பராமரிப்பு வளாகத்தில் கண் மருத்துவ முகாமையை ஏற்பாடு செய்திருந்தது.
424 பார்வை குறைப்பாடுள்ளவர்கள் இம்முகாமில் பயனடைந்தனர். மேலும், 77 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்காக விஷேட வைத்திய நிபுணரின் ஆலோசனைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியானது புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற உதவி அமைப்பின் செயலாளர் வைத்தியர் சர்வேஸ்வரனின் பங்களிப்போடு 56 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.கஸ்தூரிமுதலிஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடாத்தப்பட்டது.
சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற உதவி அமைப்பின் பணியாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.