22nd December 2023 05:29:26 Hours
சிறந்த உறவுகளை வளர்க்கும் நோக்குடன் 55 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் 551 வது காலாட் பிரிகேட் படையினர் 2023 டிசம்பர் 14 ஆம் திகதி கிளிநொச்சி உதயநகர் கிழக்குப் பிரதேசத்தில் தகுதியான குடும்பத்திற்கு புதிய வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்துடன் மேஜர் ஜெனரல் ஆர். ரத்னசிங்கம் (ஓய்வு) அவர்களின் ஒருங்கிணைப்பின் மூலம் வன்னி எய்ட் அமைப்பின் கனடாவைச் சேர்ந்த கலாநிதி ஸ்ரீ துரையப்பா அவர்கள் நிதியுதவி வழங்கினார்.
கிளிநொச்சி உதயநகர் கிழக்கு திருமதி பத்மநாதன் ராதிகா அவர்களின் குடும்பத்திற்கான வீட்டிக்கு 7 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர் அடிக்கல் நாட்டியதுடன் மனித வளம் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கும் வீட்டை நிர்மாணிக்கும் பணியை 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் வழிகாட்டலின் கீழ் 551 வது பிரிகேட் தளபதியின் மேற்பார்வையுடன் ஆரம்பித்தனர்.
மரக்கன்று நடுதல் மற்றும் பயனாளிகளுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கலுடன் அன்றைய நிகழ்வுகள் நிறைவுற்றன. இந்நிகழ்வில் 552 மற்றும் 553 வது காலாட் பிரிகேட் தளபதிகள், 55 வது காலாட் படைப்பிரிவின் கேணல் பொதுப்பணி, சிரேஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் குணரத்ன (ஓய்வு), கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர், ஏனைய அழைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். .