15th February 2023 18:39:32 Hours
யாழ். வடமராட்சி கிழக்கில் கடற்கரை கரப்பந்தாட்டத்தை இளைஞர்களிடையே பிரபலப்படுத்தும் நோக்கத்துடன் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 55 வது காலாட் படைப்பிரிவின் 553 வது பிரிகேட் படையினரால் ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 12) தாலய்யடி கடற்கரையில் கரப்பந்து பயிற்சியை ஏற்பாடு செய்தனர்.
குடாநாட்டில் உள்ள 15 விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள் இராணுவப் பயிற்றுனர்கள் மற்றும் தகுதி வாய்ந்த சிவில் பயிற்றுனர்களின் தலைமையில், ஆர்வத்துடன் பயிற்சியில் ஈடுபட்டதுடன் இராணுவ கடற்கரை கரப்பந்தாட்ட மற்றும் சிவில் பயிற்சியாளர்கள் பயிற்சி போட்டியிலும் பங்கு பற்றினர்.
யாழ். பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மற்றும் 55 வது படைப்பிரிவின் தளபதியின் வழிகாட்டலின் பேரில் 553 வது பிரிகேடின் 12 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி மற்றும் 10 வது (தொ) விஜயபாகு காலாட் படையினரால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன அவர்கள் பிரதம அதிதியாக ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் திரு. சசீந்திரன் கபில்ராம், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம சேவை அதிகாரிகள் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளம் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.