19th April 2023 20:40:14 Hours
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 55 வது காலாட் படைப்பிரிவின் கீழ் சேவையாற்றும் அனைத்துப் படையினரும் பிரதேச மக்களும் பளை பொது மைதானத்தில் கடந்த 10 ஏப்ரல் 2023 பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் வேடிக்கையான அம்சங்களுடன் புத்தாண்டு நிகழ்வை கொண்டாடினர்.
55 வது படைப்பிரிவி்ன் தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயூபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி ஐஜீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் வேடிக்கை அம்சங்களில் தலையணை சன்டை, பானை உடைத்தல், கயிறு இழுத்தல், யானைக்கு கண்வைத்தல், ஓலை பின்னுதல், தேங்காய் துருவல், இசை நாற்காலி, பலூன் உடைத்தல், பனிஸ் சாப்பிடுதல், சாக்கு ஓட்டம், தேசிக்காய் சமனிலை ஓட்டம் , கோல போட்டி, வினோத உடை போட்டி போன்றவை இடம் பெற்றிருந்தன.
அதே நிகழ்வின் போது, பிரதேச செயலகம், 55 வது காலாட் படைப்பிரிவு படையினரின் ஆதரவுடன் அதே இடத்தில் வர்த்தக சந்தையும் ஏற்பாடு செய்யப்பட்டது.
55 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயூபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி ஐஜி, 552 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஜேஎஸ்எஸ் ரதெல்லகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, 552 வது காலாட் பிரிகேட் சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் ஆர்ஆர்எஸ் தெஹிகல ஆகியோரின் ஒருங்கிணைப்பில் பளை பிரதேச செயலகம், பளை பொலிஸ் நிலையம். பளை வர்த்தக சங்கம் மற்றும் சிவில் குழுவினர் இந்நிகழ்வுக்கு அனுசரணை வழங்கினர்.
551 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எஸ்ஜே காரியகரவன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, 55 வது காலாட் படைப்பிரிவின் பணிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள்,பிரிகேட்கள் மற்றும் படையலகுகளின் அதிகாரிகள், கிளிநொச்சி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு அஜித் குணரத்ன. பளை பிரதேச செயலாளர் கிருஷ்ன ராஜேந்திரன், பளை பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் திரு. குலரத்ன, பளை வர்த்தக சங்கத்தின் தலைவர் திரு. குஜநாதன், இந்து சங்க பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், நன்கொடையாளர் திரு.மாதன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.