12th October 2023 19:42:48 Hours
சிவில்-இராணுவ ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன், 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.டபிள்யூ.ஏ. செனவிரத்ன யுஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் 2023 ஒக்டோபர் 08 ஆம் திகதி துள்ளிக்குடியிருப்பு புனித மரியாள் கரப்பந்து மைதானத்தில் கரப்பந்து போட்டி நடத்தப்பட்டது.
543 காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டி.என்.சீ சேரசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிக்காட்டலுக்கமைய 543 வது பிரிகேட் படையினரால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
11 வது இலங்கை பீரங்கி படையணி மற்றும் 4 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் நிறுவன அம்சங்களில் முன்னிலை வகித்தனர். இதில் மன்னார் பிரதேசத்தில் உள்ள 13 சிவில் விளையாட்டுக் கழக அணிகள் தீவிரமாக பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியானது இப் பிரதேசத்தில் இராணுவத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் ஒரு தனித்துவமான திட்டமாக அமையபெற்றது. மேலும் உள்ளூர் வணிக சமூகம் அனுசரனை மற்றும் ஆதரவை வழங்குவதன் மூலம் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது, இந்த நிகழ்வின் வெற்றிக்கு வெற்றி கிண்ணம் மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்குவதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது.