08th February 2024 18:48:44 Hours
541 வது காலாட் பிரிகேட் படையினர் கொமாண்டோ படையணி விசேட போர் பயிற்சி பாடசாலையுடன் இணைந்து 2024 பெப்ரவரி 7 ம் திகதி பெரியமடு மகா வித்தியாலயத்தில் ஈச்சலவாக்கை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் பெரியமடு மகா வித்தியாலய 253 மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்களை நன்கொடையாக வழங்கினர்.
வவுனியா செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் திரு.அன்டன் பிரணிதநாயகம் மற்றும் அவரது பணியாளர்கள் இந்த பணிக்கான நிதியுதவியை வழங்கினர்.
இந்த நிகழ்வில் 541 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிவைசீ பெர்னாண்டோ ஆர்டபிள்யூபீ யூஎஸ்சீ கொமாண்டோ படையணி விசேட போர் பயிற்சி பாடசாலையின் கட்டளை அதிகாரி, வவுனியா செஞ்சிலுவைச் சங்க கிளையின் அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அதிபர்/ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.