29th December 2023 20:46:01 Hours
நத்தார் தினத்தை முன்னிட்டு 54 வது காலாட் படைப்பிரிவினரால் மன்னார் இராஜேஸ்வரி தேவாலயத்தில் 2023 டிசம்பர் 27 அன்று நத்தார் கரோல் நிகழ்வு ஏற்பாடு செய்யபட்டிருந்தது.
இந்நிகழ்வில் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பீஏடிடபிள்யூ நாணயக்கார அவர்கள் கலந்து கொண்டார். கரோலர்கள் தங்கள் குரல்களால் நத்தார் கரோல்களைப் பாடி அனைவரையும் மகிழ்வூட்டினர்.
இந் நிகழ்வில் கிறிஸ்தவ மதகுருமார்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், அரச அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.