06th June 2023 17:31:56 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் மன்னார் 54 வது காலாட் படைப்பிரிவின் படையினர் பொசன் பௌர்ணமி தினம் (3) மன்னார், தள்ளடியில் 'பொசன்' வலயத்தை ஏற்பாடு செய்தனர்.
பொசன் வலயமானது ‘அன்னதானம்’, மிஹிந்தலை மாதிரி, வண்ணமயமான விளக்குகள் மற்றும் பக்தி கீதம் போன்றவற்றை உள்ளடக்கியிருந்தது.
54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎச்ஆர்ஆர்விஎம்என்டீகேபி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. 541, 542, 543 வது காலாட் பிரகேட் படையினர் பொசன் வலயத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சீடி ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி. ஏ ஸ்டான்லி டி மெல், பிரகேட் தளபதிகள், 54 வது காலாட் படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள்,அதிகாரிகள், சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.
54 வது காலாட் படைப்பிரிவின் 'பொசன்' வலயத்தைக் கண்டுகளித்ததுடன், படையினர்களால் வழங்கப்பட்ட ' அன்னதானத்தில் பிரதேசத்திலுள்ள 4000க்கும் மேற்பட்ட பல்வேறு மக்கள் கலந்து கொண்டனர்.