18th November 2023 20:13:58 Hours
மன்னார் 54 வது காலாட் படைப்பிரிவின் படையினர் புதன்கிழமை (நவம்பர் 15) 54 வது காலாட் படைப்பிரிவில் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய வெளியேறும் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஜி.டபிள்யூ.ஏ செனவிரத்ன யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களுக்கு பிரியாவிடை அளித்தனர்.
பிரியாவிடை பெறும் தளபதிக்கு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் அன்றைய நிகழ்வின் முதல் நிகழ்வாக வளாகத்தில் உள்ள போர் வீரர்களின் நினைவுத்தூபியில் மலர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், அலுவலகத்தில் தனது கடமைகளைத் விடுவதைக் குறிக்கும் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் அவர் கையொப்பமிடுவதற்கு முன், அவர் அணிவகுப்பு மரியாதையை பெற அழைக்கப்பட்டார். அனைத்து நிலையினருக்கு உரையாற்றுவதற்கு முன்னர் அன்றைய நினைவுகளைச் சேர்க்கும் வகையில் சில குழுப்படங்களும் எடுத்துக் கொண்டார். மேலும் அவரது பதவிக் காலத்தில் வழங்கிய உதவி மற்றும் ஆதரவிற்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். படையினருக்கான உரையின் முடிவில், 54 வது காலாட் படைப்பிரிவின் பிரிகேட்கள் மற்றும் படையலகுகளினால் அவருக்கு சிறப்பு நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன. அவர் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்தின் போது அனைவருடனும் உரையாடினார்.
நிகழ்வின் முடிவில், அதிகாரிகளின் உணவகத்தில் பிரியாவிடை பிரியாவிடை இரவு விருந்து வழங்கப்பட்டது. பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் அன்றைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.