12th June 2023 18:56:36 Hours
மன்னார் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க 54 ஆவது காலாட் படைபிரிவின் படையினர் மன்னார் நகர மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்ததானம் நிகழ்வில் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் நலனுக்காக இரத்ததானம் செய்தனர்.
54 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யுடபிள்யுஎச்ஆர்ஆர்வீஎம்என்டீகேபி நியங்கொட ஆர்டபி்ளயுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி மற்றும் 543 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் டீசி ஹரஸ்கம ஆர்எஸ்பீ ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது 54 வது காலாட் படைபிரிவின் பிரிகேட்கள் மற்றும் படையலகுகளின் 110 க்கும் மேற்பட்ட படையினர் இரத்த தானம் செய்தனர்.