Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th September 2023 20:21:45 Hours

533 வது காலாட் பிரிகேடினால் நூலக புத்தகங்கள் நன்கொடை

முதலாம் படையின் 53 வது காலாட் படைப்பிரிவின் 533 வது காலாட் பிரிகேடினால் வெள்ளிக்கிழமை (செப்டெம்பர் 15) மஹிந்த மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது அனுராதபுரம் காந்திரிங்கம மஹிந்த மகா வித்தியாலயத்தில் மாணவர்களின் பாவனைக்காக பெருமளவிலான நூலகப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

53 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஜிபீஎஸ் ரத்னாயக்க ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டிசி, 533 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஏஎம்எஸ்டிபி அதிகாரி ஆர்எஸ்பீ ஆகியோரின் வேண்டுகோளுகிணங்க அவுஸ்திரேலியாவின் இலங்கை சமூகம், சிட்னி மத்திய கடற்கரை மற்றும் திரு திருமதி பாலித அதிகாரம் மற்றும் சில நன்கொடையாளர்களால் அனுசரணை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 53 வது காலாட் படைப்பிரிவின் தளபதி அவர்கள் கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் 533 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஏஎம்எஸ்டிபி அதிகாரி ஆர்எஸ்பீ, கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் அவுஸ்திரேலியா சிட்னி மத்திய கடற்கரையின் இலங்கை சமூகத்தின் பிரதிநிதிகள், காந்தியகம மஹிந்த மகா வித்தியாலய அதிகாரிகள் மற்றும் திரு திருமதி பாலித்த அதிகாரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.