18th March 2023 21:30:22 Hours
532 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் மேதங்க அல்விஸ் அவர்களின் வேண்டுகோளின் பேரில் 'யுத்துகம' தொண்டு நிறுவனமும், கொழும்பைச் சேர்ந்த நன்கொடையாளரான திருமதி காயா மீவெல்ல அவர்களும் இணைந்து வழங்கிய அனுசரணையுடன் முதலாம் படையணியின் 53 வது காலாட் படைப்பிரிவின் 532 வது காலாட் பிரிகேட் படையினர், தெஹியத்தகண்டி 'இந்திரசார சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர்.
சக்கர நாற்காலி, கொசுவலை, பாதணிகள், செருப்புகள், சமையலறை உபகரணங்கள் மற்றும் உலர் உணவு பொதிகள் ஆகியவற்றை மார்ச் 8 அன்று வழங்கப்பட்டன. இந்தப் பொருட்களின் தேவை குறித்த சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் நிர்வாகத்தினால் தளபதியிடம் முன்வைக்கப்பட்டதையடுத்து இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
532 வது காலாட் பிரிகேடின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் விநியோக நிகழ்வில் பங்கு பற்றினர்.