Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th December 2022 21:30:12 Hours

532 வது காலாட் பிரிகேட் படையினர், மாணவர்களுக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் நிதியுதவி வழங்கல்

நல்லெண்ணம் மற்றும் புரிந்துணர்வின் அங்கமாக, தெஹியத்தகண்டிய சமனலதென்ன மற்றும் எஹலகம ஆகிய கிராமங்களில் இரண்டு அங்கவீனமுற்ற மாணவர்கள் எதிர்நோக்கும் சிரமங்களைக் கேட்டறிந்த 532 வது காலாட் பிரிகேட் படையினர், திருமதி கயா மீவெல்ல அவர்களால் வழங்கப்பட்ட நிதியுதவியில் அண்மையில் இருவருக்கும் இரண்டு சக்கர நாற்காலிகள் மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்கினர்.

532 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுமல் விக்ரமசேகர அவர்கள், அந்த மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று, கற்றலில் புத்திசாலியான இரு மாணவர்களுக்கும் அந்த வாழ்கைக்கான அங்கம் மற்றும் பாடசாலை உபகரணங்களை பரிசாக வழங்கினார். 532 வது காலாட் பிரிகேட் தளபதியின் வேண்டுகோளுக்கு இணங்க நன்கொடையாளர் இந்த திட்டத்திற்கு தனது அனுசரணையை வழங்கினார்.