Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th March 2024 16:19:18 Hours

53 வது காலாட் படைப்பிரிவினரால் சிவப்பு சந்தனமரங்களுக்கு பசளையிடும் திட்டம்

53 வது காலாட் படைப்பிரிவு படையினரால் ஹிருஜய பெருந்தோட்ட தனியார் நிறுவனத்துடன் இணைந்து, 53 வது காலாட் படைபிரிவின் நுழைவாயிலுக்கு அருகில் பெரிய அளவிலான சந்தன மரத்தோட்டத்தை மேம்படுத்துவதற்கான பசளையிடும் திட்டத்தை 11 மார்ச் 2024 அன்று முன்னெக்கப்பட்டது.

இத்திட்டம் 53 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஜீபீஎஸ் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்வில் ஹிருஜய பெருந்தோட்ட தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் சிவப்பு சந்தன மரத்திற்கு பசளையிடுதல் மற்றும் விவசாய மருந்துகள் தொடர்பான தொழில்நுட்ப அறிவை வழங்கினர்.

மேலும், ஹிருஜய பெருந்தோட்ட தனியார் நிறுவனத்தின் அதிகாரிகளால் நாற்றுகளுக்குத் தேவையான பசளைகளை இலவசமாக வழங்குவதற்கும், எதிர்காலத்தில் இலவச கன்றுகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் உறுதியளித்தனர்.

இந்த சந்தன மரத்தோட்டம் இலங்கை மற்றும் தெற்காசியாவில் உள்ள மிகப்பெரிய சிவப்பு சந்தன தோட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.