Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th November 2023 19:59:22 Hours

522 வது காலாட் பிரிகேட் படையினரால் தேவாலய வளாகத்தில் தென்னம் பிள்ளைகள் நாட்டல்

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) கடைக்காடு புனித மரியாள் தேவாலயத்தில் இறுதி சிறப்பு ஆராதனையை நடத்துவதற்கு 52 வது காலாட் படைபிரிவின் 522 வது காலாட் பிரிகேட் படையினர் தங்கள் உதவியை வழங்கினர்.

யாழ் பேராயர், வண. ஜஸ்டின் பேர்னர்ட் ஞானப்பிரகாசன் தலைமையில் சிறப்பு சேவையில் 52 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹம்பத் ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியுபீ எஸ்சி, 522 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் கே.ஏ.டி.சி.ஆர் கன்னங்கர ஆர்எஸ்பீ, 1 வது இயந்திரவியற் காலாட் படையணி கட்டளை அதிகாரி மேஜர் பீஆர் அத்தபத்து யுஎஸ்பீ சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் 2500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில், 522 வது காலாட் பிரிகேடின் 1 வது இயந்திரவியற் காலாட் படையணி படையினர் தேவாலய வளாகத்தில் 45 தென்னம் பிள்ளைகளை நட்டனர். சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொண்ட அனைத்து மதகுருமார்களுக்கும் காலை உணவை படையினர் வழங்கினர்.