Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st April 2023 19:01:21 Hours

52 வது காலாட் படைப்பிரிவு தளபதி பாலர் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கல்

யாழ்ப்பாணம், நாவட்குழி ‘விருதரு’ பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் சிறார்களுக்கு இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கட்டளையின் கீழ் உள்ள 52 வது காலாட் படைப் பிரிவின் படையினர் வெள்ளிக்கிழமை (மார்ச் 31) முன்னெடுத்தனர்.

நாவட்குழி ‘விருதரு’ பாலர் பாடசாலை நாவட்குழியில் உள்ள ஒரே ஒரு தமிழ்/சிங்கள கலவன் பாலர் பாடசாலை ஆகும். இதில் சிங்களவர்கள் அதிகம் கல்வி பயில்கின்றனர். 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் சஞ்சீவ பெர்னாண்டோ தனது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து இந்த திட்டத்திற்கான நிதியுதவியை வழங்கினார்.

இந்நிகழ்வில் 523 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுபாஷ் சிறிவர்தன, மேஜர் ஜெனரல் சஞ்சீவ பெர்னாண்டோவின் மனைவி, 52 வது காலாட் படைப்பிரிவின் சிரேஷ்ட பணிநிலை அதிகாரிகள், சிவில் விவகார அதிகாரிகள் மற்றும் 11 வது களப் பொறியியலாளர் படைப்பிரிவுப் படையினர் கலந்துகொண்டனர்.