27th August 2023 11:07:45 Hours
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் சமூகம் சார்ந்த திட்டத்தின் கீழ் 513 வது காலாட் பிரிகேடின் 51 வது காலாட் படைப்பிரிவின் படையினர் 23 ஓகஸ்ட் 2023 அன்று சுண்டிபுர சிவபூமி முதியோர் இல்லத்திற்கு மதிய உணவை வழங்கினர்.
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் ஆசிர்வாதத்துடன், 513 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம்ஆர் ராஸிக் ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் 513 வது காலாட் பிரிகேட் படையினர் நிகழ்ச்சியை நடத்தியதுடன், இந் நிகழ்ச்சி பிரிகேட்டின் 28 வது ஆண்டு விழாவிற்கு இணையாக இடம் அபெற்றது.
சிவபூமி முதியோர் இல்லத்தின் 20 ஆண்களும், 36 பெண்களும் இராணுவத்தினரால் வழங்கப்பட்ட உணவை பெற்றுக் கொண்டதுடன், அவர்களை இசை நிகழ்ச்சியிலும் மகிழ்வித்து அவர்களின் நலன் கருதி அத்தியாவசியப் பொருள்களும் வழங்கப்பட்டன.